திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும் மாந்தர்கள் நாம்

நோயும் பிணியும் தொடமுன்னே
அழகாம் நொடிகளை ரசித்தெழுதி
அன்பின் கலப்பில் உணர்விழைய
அகத்துள் உறவை வளர்த்தோமா

நிலையா வாழ்வை நிலையென்று
நிமிடமும் உழைத்து ஓடாக- பிறர்
வாடிட வதங்கிட எம் பணப்பை
நிறைக்க ஓடிய மனிதர்கள் நாம்

அழையாத் தோழர்கள் அடிவருட
அனைத்து நோய்களும் அடிமை கொள்ள
விட்டவை தொட்டவை துயரெழுதி
துடித்தே மாள்வது சரிதானோ

திசையும் திருப்பமும் கணங்களுள்ளே
திருடிட முன்னே வனப்பிடுங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading