இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ வாழ்க்கையில்
நிம்மதி காணப் பெற்றவரும் பிள்ளைகளும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்
பெற்றோருக்கும் பெரியாருக்கும்
கனம் பண்ணுவது அந்தக்காலம்
பெற்ற பிள்ளைகளுக்குப் பயந்து கனம்பண்ணி நடப்பது இந்தக்காலம்
கணவனைப் போற்றுவது அந்தக்காலம்
சமவுடைமை பேணுவது இந்தக்காலம்
பாசம் பொங்கி வழிந்தது அந்தக்காலம்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஆசைகள் பெருகியதால் பண ஆசைகள் பெருகியதால்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஏற்றங்கள் இறக்கங்காண
மாற்றங்கள் கண்டதே
வாழ்க்கை!

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading