நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நட்பென்றாலே

நட்பென்றாலே

உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு

எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு

ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு

உயிர்காக்கும் தோழமையில் உசிராக நடைகொண்டு

நாடொப்ப நேசமது நாளும் தொடர்ந்துகொண்டு

நட்பென்றாலே என்றும் நயமாக இருந்துகொண்டு

சாற்றும் திருவிளக்காய் ஒளியும் வீசிக்கொண்டு

ஆற்றலும் தூண்டும் நட்பென்ற பேர்கொண்டு

விலகாத தொடர்பு விரும்பியே சென்றுகொண்டு

இனிமையான உறவாய் என்றும் நின்றுகொண்டு

தாங்கும் தோளாய் தோள்கொடுக்கும் தோழமைகொண்டு

துரோகமின்றியே விசுவாசம் பெருகிடவே வாழ்தலே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan