நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே…. 30.07.2026

எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில் ஒளியாய் நிற்கும் தூய்மை
கருணை மழையைப் பொழியும் காருண்ணியம்
வாழ்வின் இறுதிவரை தொடரும் பயணம் நட்பு !

சிலுவையைப்போல சுமப்பது நட்பு
நிலுவை இல்லா நிஜம்நட்பு
தேவையின் போது தோளிற்சாய
துன்பத்தின்போது கண்ணீர் துடைக்க
மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம்விட்டுப்பேச
வேண்டும் என்றும் தூயநட்பு !

வாழ்வியல் பயணத்தில் எத்தனையோ மனிதர்கள்
வந்துபோவார் வெறும்அலைகளாய்
தூயநட்பு மட்டுமே நிலையாய் நிற்கும்
நெஞ்சக்கரையில் நிரந்தரப் பாறையாய்
உலகேஎதிர்த்தாலும் நான் இருக்கிறேனென்று
நம்பிக்கைதரும் ஒற்றைச்சொல்லே
ஆயுள்வரைக்கும் தொடரும் நட்பு !