மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Abiramy Kavithasan

29.03.2022
சந்தம் சிந்தும் வாரம் -168
„தாய்மண்ணே வணக்கம்“

சின்னஞ்சிறு தீவே சிரித்திருந்த பூவே
உன்றன் எழிலழகு உருகியதும் ஏனோ /

வெள்ளைமன மக்கள் வீற்றிருந்த மண்ணில்
பிள்ளையழும் பஞ்சப் பிணி வந்ததேனோ /

சுட்டமண் தாய்நாட்டை சுந்தர தமிழராண்டான்
கட்டிக்காத்த நாட்டுபற்றறுத்து கடல்தாண்டி மீண்டும்பயணம் /

சுற்றுலா தளமழகை சூட்டிய பசுமையே
ஏற்றுமதி தேயிலையும் ஏற்றம்கண்ட என்நாடே /

யுத்த காலத்தில் யுகத்தை கைவிடவே
சத்தமின்றி அயலவன் சதிதிட்டம் தீட்டினர் /

திட்டம் போட்டு நாடையாழ திசைக்கொருவன் நின்று
வட்டமிடும் கழுகுகூட்டம் வஞ்சக நெஞ்சத்தினர் /

தாய்மண்ணே வணங்குகின்றேன் தார்மீக பற்றுடனே
மாய்ந்திடாதே மலர்ந்திடுவாய் மகிழ்ந்திடுவேன் மண்மீதில் /

நன்றி வணக்கம் பாவைஅண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading