Abiramy Kavithasan

29.03.2022
சந்தம் சிந்தும் வாரம் -168
„தாய்மண்ணே வணக்கம்“

சின்னஞ்சிறு தீவே சிரித்திருந்த பூவே
உன்றன் எழிலழகு உருகியதும் ஏனோ /

வெள்ளைமன மக்கள் வீற்றிருந்த மண்ணில்
பிள்ளையழும் பஞ்சப் பிணி வந்ததேனோ /

சுட்டமண் தாய்நாட்டை சுந்தர தமிழராண்டான்
கட்டிக்காத்த நாட்டுபற்றறுத்து கடல்தாண்டி மீண்டும்பயணம் /

சுற்றுலா தளமழகை சூட்டிய பசுமையே
ஏற்றுமதி தேயிலையும் ஏற்றம்கண்ட என்நாடே /

யுத்த காலத்தில் யுகத்தை கைவிடவே
சத்தமின்றி அயலவன் சதிதிட்டம் தீட்டினர் /

திட்டம் போட்டு நாடையாழ திசைக்கொருவன் நின்று
வட்டமிடும் கழுகுகூட்டம் வஞ்சக நெஞ்சத்தினர் /

தாய்மண்ணே வணங்குகின்றேன் தார்மீக பற்றுடனே
மாய்ந்திடாதே மலர்ந்திடுவாய் மகிழ்ந்திடுவேன் மண்மீதில் /

நன்றி வணக்கம் பாவைஅண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading