Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வவாரம்-17.01.2023
கவி இலக்கம்–206
புதிர்
———
இன்று கவி தலைப்பே புதிராக திகழ்கிறதே
கவிப் புதிரில் 206 ஆவது இலக்கமாகிறதே
கவிஞர்கள் புதிராக புதுக் கவிதை படைக்கிறனரே
மனித வாழ்க்கையே புதிராக பதிவாகிறதே
நம்மை புரிந்தும் புரியாதோர் பலரே
புரிகின்ற வரை வாழ்க்கை கேள்வியாகின்றதே
இன்ப துன்பம் புதிர் புதிராக வந்து போகுமே
விகடகவியோ புதிரான கதை கொட்டுவாரே
அறிவான புதிராக விடை சிரிப்பாக மலருமே
வயலிலே புதிதான புதிர் எடுத்தனரே
வீட்டு வாசலிலே புதிர் தொங்க விடுவினரே
பொங்கலுக்கு உதவிடும் புதிர் நெல் மணிகளே
உழவர் மக்கள் உண்டு மகிழ்ந்து கொள்வனரே
பொங்கல் பொங்க வைத்து மகிழ்ந்து உண்பனரே
ஜெயா.நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading