சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.11.2024
கவிதை நேரம்-286
சூரன் போர்
——————-
நல்லூர் கந்தசாமி கோவில்
சூரன் போர் காட்சி
கோயில் நிறைந்த பக்தர்கள்
மழை கொட்ட கொட்ட
மக்கள் கூட்டம்
முருகன் சிம்ம வாகனத்தில் வலம் வருகிறார்
பச்சை துணி உடுத்தி
கழுத்தில் நகை அணிந்து கெம்பீரத்துடன் காட்சி
சிவப்பு துணி உடுத்திய
பக்தர்கள்
தூக்கி வரும் நிலையில்
கோயிலை மூன்று முறை சுற்றி வருகிறார்
இளையோர் போர் ஆயுதங்களுடன்
நீல நிற வேட்டியுடன்
முன் போகிறார்கள்
பஜனையுடன் பல மக்கள் பாடி வருகிறார்கள்
ஐயர்மார் அலங்கார உடையுடன் அழகிய பட்டு வேட்டிகளில் அதிகமானோர்
சூரன் மறு வாசலால் அம்பு வில்லுடன் வீரத்துடன் வருகிறார்
பாணங்கள் பாய்கின்றன
மக்களெல்லாம் கும்பிட்டு கொண்டு போரை பார்க்கிறார்கள்
கடைசியாக தலை விழுகிறது
மக்கள் அரோகரா சொல்லி அழைத்து வணங்கிகிறார்கள்
ஒருக்காலும் நடை பெறாத நிலையில்
இம்முறை மக்கள் சந்தோசமாக கொண்டாடி முடித்தது
தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்வே
நானும் படக்காட்சியில் பாரத்து வியப்படைந்தேன்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan