பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.11.2024
கவிதை நேரம்-286
சூரன் போர்
——————-
நல்லூர் கந்தசாமி கோவில்
சூரன் போர் காட்சி
கோயில் நிறைந்த பக்தர்கள்
மழை கொட்ட கொட்ட
மக்கள் கூட்டம்
முருகன் சிம்ம வாகனத்தில் வலம் வருகிறார்
பச்சை துணி உடுத்தி
கழுத்தில் நகை அணிந்து கெம்பீரத்துடன் காட்சி
சிவப்பு துணி உடுத்திய
பக்தர்கள்
தூக்கி வரும் நிலையில்
கோயிலை மூன்று முறை சுற்றி வருகிறார்
இளையோர் போர் ஆயுதங்களுடன்
நீல நிற வேட்டியுடன்
முன் போகிறார்கள்
பஜனையுடன் பல மக்கள் பாடி வருகிறார்கள்
ஐயர்மார் அலங்கார உடையுடன் அழகிய பட்டு வேட்டிகளில் அதிகமானோர்
சூரன் மறு வாசலால் அம்பு வில்லுடன் வீரத்துடன் வருகிறார்
பாணங்கள் பாய்கின்றன
மக்களெல்லாம் கும்பிட்டு கொண்டு போரை பார்க்கிறார்கள்
கடைசியாக தலை விழுகிறது
மக்கள் அரோகரா சொல்லி அழைத்து வணங்கிகிறார்கள்
ஒருக்காலும் நடை பெறாத நிலையில்
இம்முறை மக்கள் சந்தோசமாக கொண்டாடி முடித்தது
தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்வே
நானும் படக்காட்சியில் பாரத்து வியப்படைந்தேன்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading