” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.11.2024
கவிதை நேரம்-286
சூரன் போர்
——————-
நல்லூர் கந்தசாமி கோவில்
சூரன் போர் காட்சி
கோயில் நிறைந்த பக்தர்கள்
மழை கொட்ட கொட்ட
மக்கள் கூட்டம்
முருகன் சிம்ம வாகனத்தில் வலம் வருகிறார்
பச்சை துணி உடுத்தி
கழுத்தில் நகை அணிந்து கெம்பீரத்துடன் காட்சி
சிவப்பு துணி உடுத்திய
பக்தர்கள்
தூக்கி வரும் நிலையில்
கோயிலை மூன்று முறை சுற்றி வருகிறார்
இளையோர் போர் ஆயுதங்களுடன்
நீல நிற வேட்டியுடன்
முன் போகிறார்கள்
பஜனையுடன் பல மக்கள் பாடி வருகிறார்கள்
ஐயர்மார் அலங்கார உடையுடன் அழகிய பட்டு வேட்டிகளில் அதிகமானோர்
சூரன் மறு வாசலால் அம்பு வில்லுடன் வீரத்துடன் வருகிறார்
பாணங்கள் பாய்கின்றன
மக்களெல்லாம் கும்பிட்டு கொண்டு போரை பார்க்கிறார்கள்
கடைசியாக தலை விழுகிறது
மக்கள் அரோகரா சொல்லி அழைத்து வணங்கிகிறார்கள்
ஒருக்காலும் நடை பெறாத நிலையில்
இம்முறை மக்கள் சந்தோசமாக கொண்டாடி முடித்தது
தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்வே
நானும் படக்காட்சியில் பாரத்து வியப்படைந்தேன்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan