சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-05.01.2022 புதன்
கவி இலக்கம்-1436
கவிதை எழுதுவோம்
————————————-
கவிதை எழுதுவோம் கவிதை எழுதுவோம்
வெள்ளை கடதாசியில் பேனை கொண்டு எழுதுவோம்
முதல் நாலு வரி எழுதுவோம்
திரும்பி திரும்பி படித்து திருத்தி எழுதுவோம்
எட்டுவரி பதினாறு வரியாகி கருக்கொண்ட
கவிதையாக எழுதி முடிப்போம்
இயற்கையில் கண்டவைகளை
பார்த்து ரசித்து கற்பனை உலகில் மிதந்து
உள்ளத்து உணர்வுகளை
உரிமை வேட்கைதனை
சில பொய் புழுகலை
கள்ளமற்ற உள்ளத்தால்
கணக்கெடுத்து அதை
இவ்வுலக வாழ்க்கையில்
நடந்தவை கடந்தவை
அள்ளிக் கொட்டி அலங்காரமாய்
எழுதி பாருங்களேன் ஆரோக்கியமான
கவிதையாய் உருப்பெறுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading