Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-10.01.2022
கவி இலக்கம்-1438
இயற்கையின் சிறப்பு

கொடையென இறைவன் தந்தார்
குதூகல இயற்கை ஒன்றன்றோ
பூமியிலே விதைகளை விதைக்கவே
பயிர்கள் பலன் பல தருகின்றரே
கார் மேகங்கள் பொழியும் மழையினாலோ
விவசாயிகள் மனம் குளிர்கின்றதுவே
ஆண்டுகளும் கடந்து செல்கின்றனவே
இயற்கையுடன் மரங்களை நடுவோமே
சுற்றுச் சூழல் சுகாதாரம் பாதுகாத்து
சுக பலத்துடன் வாழக் கற்றுக் கொள்வோமே
சிந்தித்து செயல் படுவோம்
சீரான வாழ்வில் இயற்கை ஒட்டி வாழ்வோமே

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading