இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.01.2022
கவி இலக்கம்-158
பரவசம்
————-
அதிகாலை பூபாளம் புலர்ந்தது
கதிரவன் ஒளி மிளிர்ந்தது
அண்டவெள நட்சத்திரங்கள் மின்னி மறைந்தது
பூக்களெல்லாம் இதழ் அகல விரித்தது
தேனுண்ண வண்டுகள் ரீங்காரம் இசைத்தது
பெண்கள் பூப் பறித்து மாலையாகி அணிந்தது
கண்கள் நிறைந்த காட்சிகள் மனதிற்கு பரவசமாகியது
பாமுகத்தில் நிகழ்வுகள் நிறைந்தது
பாமுக பூக்கள் கவிதையில் முகங்கள் மலர்ந்தது
இளையோர் அரும்புகளில் மொழிகள் இனித்தது
ஊக்கமும் ஆக்கமும் பாட்டும் பரவசம் ஊட்டியது
புலம்பெயர் நாட்டில் வெண்பனிப் பூக்கள் நிறைந்தது
பொங்கலும் பொங்கி மனங்களும் பொங்கி மலர்ந்து
பெண்களின் ஆட்டமும் பாட்டமும் அழகானது
மக்களும் பெற்றோரும் பார்த்து பரவசமானது

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading