” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.01.2022
கவி இலக்கம்-158
பரவசம்
————-
அதிகாலை பூபாளம் புலர்ந்தது
கதிரவன் ஒளி மிளிர்ந்தது
அண்டவெள நட்சத்திரங்கள் மின்னி மறைந்தது
பூக்களெல்லாம் இதழ் அகல விரித்தது
தேனுண்ண வண்டுகள் ரீங்காரம் இசைத்தது
பெண்கள் பூப் பறித்து மாலையாகி அணிந்தது
கண்கள் நிறைந்த காட்சிகள் மனதிற்கு பரவசமாகியது
பாமுகத்தில் நிகழ்வுகள் நிறைந்தது
பாமுக பூக்கள் கவிதையில் முகங்கள் மலர்ந்தது
இளையோர் அரும்புகளில் மொழிகள் இனித்தது
ஊக்கமும் ஆக்கமும் பாட்டும் பரவசம் ஊட்டியது
புலம்பெயர் நாட்டில் வெண்பனிப் பூக்கள் நிறைந்தது
பொங்கலும் பொங்கி மனங்களும் பொங்கி மலர்ந்து
பெண்களின் ஆட்டமும் பாட்டமும் அழகானது
மக்களும் பெற்றோரும் பார்த்து பரவசமானது

Nada Mohan
Author: Nada Mohan