“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-01.03.202
கவி இலக்கம்-163
எண் 12ன் மகத்துவங்கள்
———————————
பன்னிரண்டு வருடங்களுகக்கு
ஒரு முறையே
பாரினில் மலைச்சாரல்களிலே
பூப்பதுவே அழகான குறிஞ்சி மலர்களே

பன்னிரண்டு மாதங்கள் வழி அனுப்பி வைக்கவே
புத்தாண்டாக பவனி வருவது புத்தாண்டே

பன்னிரண்டு அங்குலமாய் அடி மட்டத்திலே
ஒரு அடியாய் அன்று பழக்கமானது பழங்கணக்கே

பன்னிரண்டு பொருட்களை அடுக்கி ஒரு டசின் அதுவே
அன்றைய பள்ளிக்கூடத்தின் பழங்கணக்கே

பன்னிரண்டு இலக்கம் கொண்ட இரு கம்பிகள் கொண்டதே
இரவு பகலாய் ஓடி ஓடி உழைக்கவே தூக்கமற்றே

பன்னிரண்டு மணியளவில் கள்வர்கள் வீடுகளிலே
தங்களது கை வரிசையை காட்டி விட்டு கொள்ளையாகுதே

Nada Mohan
Author: Nada Mohan