திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026

செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு அகவையின் உயர்வு ஆனந்த வரவு ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு காலமும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-24.03.2022
கவி இலக்கம்-1481

குடிநீர்
—————-
மேகம் கறுத்தது
இருள் சூழ்ந்தது
மெல்லென குளிர் காற்று வீசியது
துளி துளியாய் நீர் கொட்டியது
சிறு துளிகள் பெரு வெள்ளமானது
கிணறு குளம் குட்டை நிரம்பியது
மக்களுக்கு மிருகங்களுக்கு குடி நீரானது
தாகம் தீர்த்து வரமாய் வந்து பலனளித்தது
குடிநீரை சூடாக்கி குடிப்பது ஆரோக்கியமானது
நிலம் பசுந்தரையானது
விவசாயிகள் மனம் குளிர்ந்தது
குடிநீர் பஞ்சமான நாடுகள் பலது
இறந்தோர் தொகையும் அதிகமானது
பணம் கொடுத்து குடிநீர் காசானது
காகம் குடிநீர் தேடி அலைந்தது
குடமதில் சிறு கற்கள் போட்டு நிரப்பியது
தாகம் தீர்த்து பறந்து போனது கற்பனைக் கதையுமானது
வான்மழை பொழிந்தது வையகமும் வளம் பெற்றது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading