நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நீங்காத நினைவுகள்

கவிதை 800

காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ
நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே
தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே

தாயன்பின் தாலாட்டு காதுகளுள் ஒலிக்கிறதே
சிறுவயது சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றதே
நண்பர்களின் குறும்புகள் எண்ணத்தில் அகலவில்லை
முதற்காதலும் புதைந்த நினைவுகளுள் கலையவில்லை

தொலைந்த முகங்களாயினும் வார்த்தைகள் ஒலிக்கின்றன
செல்லமுடியாத பாதைகள் நினைவுகள் வாழ்கின்றன
திரும்ப கொண்டுவர முடியாதெனினும் காலத்தை
வாடாத மலரெனவே நீங்காத நினைவுகளும்

ஜெயம்
14-05-2026

Nada Mohan
Author: Nada Mohan