” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-23.03.2023
கவி இலக்கம்-1662
சுமந்தவளே சுமையானாள்
————————————–
தன் உதிரத்தையே தேனாக
பாலாக ஊட்டிய அம்மாவை
ஏணை சேலையில் கட்டி தாலாட்டி
ஆராரோ பாடி தூங்க வைத்தவளை
உணர்வுகளை அன்பாய் அளித்தவளை
பல கனவுகளுடன் வளர்த்தவளை
சம்பளம் அற்ற வேலைக்காரியாய்
கணவன் பிள்ளைகள் பணியானவளை
சுமையானாலும் சுகமாக சுமந்தபடி
வாழ வைத்த தெய்வம் அன்னையவள்
அன்பிற்காக ஏங்கித் தவித்தவளை
அரவணைக்க மனமின்றி ஆதரவின்றி
வலுவற்று மூலையில் ஒதுங்கினாள்
பிராத்தனையில் பிள்ளைகளுக்காக
உருகும் உள்ளம் கொண்டவளை
கடிந்து கொட்டி தீர்க்கும் பிள்ளைகள்
இன்று அவர்களுக்கு பெரும் சுமையானாள்
அளவுச் சாப்பாட்டிற்கு ஏங்கி எதிர்பார்த்தும்
அரவணைக்கும் பழக்கம் மறந்தவர்களாய்
கருவிலும் மடியிலும் கனவிலும் தாங்கி
சுமந்த தாய் இன்று சுமையாகி போனாளே

Nada Mohan
Author: Nada Mohan