தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.04.22
கவி இலக்கம்-170
தேடினேன்
————————-
மழையும் குளிரும் சுழல் காற்றினிலே
கதிரவன் ஒளியை நாடி தேடினேன்
பட்டுக் காய்ந்த நின்ற மரத்தினிலே
பச்சையிலை துளிர்களை தேடினேன்
அலைமோதும் நீலக் கடனிலே
அமைதி நிம்மதி பெற தேடினேன்
ஒட்டகம் வாழும் வரண்ட பாலைவனத்திலே
பூஞ்சோலை வனப்பை தேடினன்
தனிமையில் ஒதுங்கி நின்ற நிலையினிலே
உதவி பெற மனித நேயத்தை தேடினேன்
இருண்டு மறைந்த வாழ்வினிலே
ஒளியான இடம் கிடைக்க தேடினேன்
மனம் சாந்தி பெற்று ஆறுதல் பெறுதலினிலே
இறைவனைக் கண்டு கொள்ள கோவிலில் புகுந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading