மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-23.06.2022
கவி இலக்கம்-1531
மீளெழும் காலம்
———————-
ஆறறிவு உடைய மனிதனை படைத்து
அவலங்கள் பலதையும் அள்ளி கொடுத்து
அனாதை என்ற சொல்லே நீண்டு நினைவில்
அவலங்கள் மட்டும் தொடர்கின்றனவே
அண்டி வாழ்வது அன்றாடச் செயலன்றோ
உலர்ந்த மண்ணில் அகோர வெப்பம்்
உயிர் கொல்லும் நோய்களினால் துன்பம்
வறுமையும் தொழிலின்மையும் ஏக்கம்
வரவுக்கு மேலாய் பொருட்கள் விலை ஏற்றம்
மகிழ்வும் நிம்மதியும் அற்றதில் சீற்றம்
பல பக்கச் செய்திகள் பலதுமாய்
குலை நடுங்கும் வதந்திகள் ஏராளம்
குண்டுகளும் தாக்கங்களும் மரணமும்
காதில் கேட்பது மக்களின் புலம்பல் ஓசை
மொத்தமாய் கேட்பது அவல ஓசைகள்
சொந்த பந்தங்களின் சுகம் கேட்க முடியாது
நன்மை தின்மைகளுக்கும் சேர முடியாது
அகதிகளாய் ஓடியே ஆயுள் முடிந்திடுமோ
மீளெழும் காலம் விடியலாய் மலரட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading