” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும்் சந்திப்பு வாரம்-188
கவி இலக்கம்-188
மறைந்து போன மனிதம்
——————————-
மனித உயிர் இதய தோட்டத்திலே
பல வர்ண றோஜாப் பூக்கள்
பார் போற்றும் அழகிய பூமியிலே
பலவிதமான அற்புத மனிதப் பிறவிகள்
பூந்தோட்ட சோலைகள் சில இடங்கள்
பாலைவன வனாந்திரங்கள் பல இடங்கள்
மனிதபிமானம் மரணித்து போயின
காதல் எனும் அழகிய சோலையிலே
விவாகரத்து முதலிடமாகி விட்டன
பாலியல் உறவு பலாத்கார வன்செயல்கள்
மன அழுத்தம் தற்கொலைகள் மலிந்தன
கொள்ளை களவு கத்திக் குத்து மரணங்கள்
கண்ணீர் வடிக்கும் பெற்றோர் பலர்
நல்லெண்ணங்கள் நலிந்தே போயின
பாசம் கேட்டு பரிவு காட்டி பண்போடு
நேசத்தோடு இனங்கண்டு மனித நேயத்துடன்
புனிதத்தோடு மனிதத்தை வாழ வைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan