Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.09.2022
கவி இலக்கம்-192
மாட்சிமை மிக்க மகாராணியார்
———————————————
பிரித்தானிய வரலாற்றில் நீண்ட கால மகாராணியாவர்
ஐ.இராச்சியத்தின் 2-ம் எலிசபேத் முத்திரை பதித்தவர்
21.சித்திரை 1926 ல் இங்கிலாந்தில் பிறந்தவர்
தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றவர்
25 வயதில் மகாராணியா முடி சூட்டியவர்
1947 ஆடி எடின்பரோ கோமகனை கரம் பிடித்தவர்
70 ஆண்டுகள் அரியணை ஆட்சியில் அமர்ந்தவர்
பாக்கிங்காம் அரண்மனை காட்சியானவர்
மூன்று நாடுகளுக்கான பதவியை ஏற்றவர்
இங்கிலாந்தின் இராஐமாதா எலிசபேத் பெயரானவர்
15 பிரித்தானியா பிரதமர்களை அறிந்தவர்
ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சியுடையவர்
ஸ்கொட்லாந்து அரண்மனை ஓய்வில் தங்குவார்
பால்மரல் அரண்மனை 8.9.22 ல் நித்தியமானார்
உலகம் போற்றும் மகாராணி அம்மையாக திகழ்ந்தவர்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading