இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-22.06.23
இலக்கம்-1708
அகதி நாம் பெற்ற வரமா
———————————–
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
எவரளித்த மாற்றத்தினால்
நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம்
போர் தந்த சூழலிலே இன்னலோடு ஓடி வந்தோம்
அகதி என்னும் போர்வையிலே
அத்தனையும் இழந்து வந்தோம்
அயல் நாடுகளில் அடைக்கலம் பெற்று
உயிர் பிழைத்து வாழ் அகதிகளாக
நாம் பெற்ற வரமென்று தங்கி விட்டோம்
தஞ்சம் என்று ஓடி வந்த எமக்கு
வஞ்சம் இல்லாமல் வரவேற்ற நாடுகள் பல
உணவு உடை உறையுள் தந்து
ஆதரித்து அணைத்த நாடுகள்
வசதியாக வாழ்ந்த எம் இனம்
வாழ வழியின்றி வகையற்று தடுமாறி
அகதி என பட்டமதில் ஏற்று வாழ்கின்றோம்
பல்லாண்டு காலம் இங்கு வாழ வேண்டுமென
நாம் பெற்ற வரமே இறைவன் செயலே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading