பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-22.06.23
இலக்கம்-1708
அகதி நாம் பெற்ற வரமா
———————————–
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
எவரளித்த மாற்றத்தினால்
நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம்
போர் தந்த சூழலிலே இன்னலோடு ஓடி வந்தோம்
அகதி என்னும் போர்வையிலே
அத்தனையும் இழந்து வந்தோம்
அயல் நாடுகளில் அடைக்கலம் பெற்று
உயிர் பிழைத்து வாழ் அகதிகளாக
நாம் பெற்ற வரமென்று தங்கி விட்டோம்
தஞ்சம் என்று ஓடி வந்த எமக்கு
வஞ்சம் இல்லாமல் வரவேற்ற நாடுகள் பல
உணவு உடை உறையுள் தந்து
ஆதரித்து அணைத்த நாடுகள்
வசதியாக வாழ்ந்த எம் இனம்
வாழ வழியின்றி வகையற்று தடுமாறி
அகதி என பட்டமதில் ஏற்று வாழ்கின்றோம்
பல்லாண்டு காலம் இங்கு வாழ வேண்டுமென
நாம் பெற்ற வரமே இறைவன் செயலே

Nada Mohan
Author: Nada Mohan