Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.06.2023
கவிதை இலக்கம்-227
பசுமை
—————–
பசுமை நிறைந்த நினைவுகள்
என் மனதில் என்றும் நினைப்பு
பசுமை நிறைந்த பாடடசாலை நினைப்பு
பாடித் திரிந்து ஊர் சுற்றிய மகிழ்வு
வகுப்பில் தோழிகளுடன் செய்த குறும்பின் துடிப்பு
பாடசாலை சீவியம் பசுமை நிறை
மனதில் மறக்க முடியாத நினைப்பு
கள்ளமாக படம் பார்த்து மனதில் அடைந்த நிறைப்பு
கீரிமலை கடற்கரை சுற்றுத் திரிந்த மகிழ்வு
பணிக் காலங்களில் பசுமை நிறை கண்டி
மலையக சுற்றுலா மகிழ்வு
பச்சை பசேலென பரந்த
தேயிலை கொழுந்துகளின் வியப்பு
மாரி மழை நீர் நிலைகள் நிறைவு
வித்துக்களின் எழுச்சியின் உயர்வு
பயிராகி மரமாகி வளர்ச்சியின் சிறப்பு
வயல் வெளியில் நெல் மணிகளின் வனப்பு
பசுமை புரட்சியின் நல்ல தீர்ப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading