பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-29.06.2023
கவி இலகக்கம்-1714
இறைவன் படைப்பில்
இயற்கை வனப்புகள்
———————————
இறைவன் படைப்பபினில்
இயற்கை வனப்புகள்
எத்தனை அதியங்கள் அற்புதங்கள்
நீல நிறமாக ஓடும் வானமாய்
ஓயாமல் இரையும் கடல் அலைகளாய்
நீந்தி விளையாடும் மீன்களாய்
நீர் நிறைந்த குளம் ஆறு அருவிகளாய்
பச்சை பசேலென பசும் புற் தரைகளாய்
நெல் மணிகளின் அசைந்தாடும் கூத்தாய்
சிறகடித்து பறக்கும் வானத்து பட்சிகளாய்
மண்ணிலே ஊர்ந்து செல்லும் பிராணிகளாய்
ஆற அமர நின்று கொண்டு பரந்த மரங்களாய்
விண்ணிலே பவனி வரும் முகில் கூட்டங்களாய்
விண் மீன்களின் பள பளப்பும் பிரகாசமாய்
கோடை என்றதும் கொழுத்தும் வெயிலாய்
வெயில் அதிகரிப்பில் அதி அழிவுகளாய்
இயற்கை அனத்தங்கள் இடையிடையேயாய்
அத்தனையும் இறைவன் படைப்புக்களாய்
அதில் மானிடம் முத்தான முழுப் படைப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan