திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-21.12.2023
கவி இலக்கம்-1890
கடந்து வந்த பாதையில்
———————
கடந்து வந்த பாதையை
நான் திரும்பி பார்க்கிறேன்
கொஞ்சம் கரட முரடானதும்
மற்றும் பலதும் பத்துமாகவே இருந்தன
சிற்சில சந்தோஷங்கள் உறவுகள் பிரிவுகளும்
ஆற்றுப் படுத்த முடியாத நிலையானதே
நாடு விட்டு நாடு வந்து இற்றைவரை
சொகுசான வாழ்வை வாழ்வாக்கி
தனிமையில் இருக்க எம்மை தவிக்க வைத்தது
பிள்ளைகளுடன் துணையில் ஆதரவு பெற்று
வாழ்ந்து கொண்டு கடந்து வந்த பாதையானது
சுக பெலனற்று இருக்கையிலே இணையம் உதவியது
படித்தேன் அறிந்தேன் எழுத்துப் பணியில் வளர்ந்தேன்
சுயமாக வாழ்ந்து பலதும் பெற்று காலத்தை களித்தேன்
பல நிகழ்வுகளில் பங்கு பற்றி உறவுகளை சந்தித்தேன்
அன்பான உறவுகள் அரவணைப்பை பெற்றேன்
பல உறவுகளின் தோழமை கண்டு வியந்தேன்
புது மனையில் புதுமையாக புதுப் பெண்ணானேன்
பலதையும் எழுத்துப் பணியில் சாதித்தேன்
தாயகத்தில் கரம் கொடுத்து மகிழ்வு கொண்டேன்
பல வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பெற்றேன்
என் சுதந்திர வாழ்வில் நடந்து சென்று கடந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading