Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024
இலக்கம்-1795
புத்தாண்டை
வரவேற்றபடி
—————————
புத்தாண்டு 2024 ஆக புலர்ந்திடவே
உலகமெலாம் ஒலித்திடவே
உளம் மகிழ வரவேற்று வலம் வந்தாளே
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே
பல இடங்களில் திண்டாட்டம் என்பேனே
நிலை நடுக்கம் சுனாமி வெள்ளப்பெருக்கு அழிவினிலே
இயற்கை அனர்த்தங்கள் தந்தாயே
இச்சை கொண்ட உலகினிலே
பச்சை உள்ளத்தோடு மிச்சம் நீதி உரைத்திட
நாடுகளில் நிம்மதியற்ற நிலைதானே
இன்னல் துடைக்க யாருமில்லை
பொருளாதாரம் உணவுப் பொருள் விலையேற்றம்
பசி பட்டினி மக்கள் அழிவை தந்தாயே
தொற்றுநோய் போதை வஸ்து டெங்கு நோய்
அனைத்தும் ஆகும் அவனியினிலே
அதிசயமான செயல்கள் கொண்டு வந்தாயே
உன் கால் தடத்தினை நிலையாய் பதித்திடு
இன்றைய நிலையில் நீதியாய் நிலைத்திடு
ஈழத்தின் துன்பம் கழையவே வந்து விடு
சரித்திரத்தில் நிலையான இடத்தை தந்திடு
வையகத்தில் வாழ்வாங்கு சிறப்புடன் வாழ
புது உலகத்தை படைத்து புத்தாண்டே தருவாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading