Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.01.2024
கவிதை இலக்கம்-247
சிரிப்பு
———–
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகுமே
குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிரிப்பு வந்தால் அழுகை வரும்
சிரிப்பு வந்தால் உள்ளம் மலரும்
சிரிப்புக்கள் பலதாய் வரும்
ஆணவச் சிரிப்பு அழிவாக்கும்
பெண் சிரிப்பு மயக்கம் தரும்
கன்னியவள் காதலில் சிரிப்பு
தெருவில் சிரிப்பு ஏழைக்கு
பைத்தியக்கார சிரிப்பு மருத்துவ மனைக்கு
மன மகிழ்வில் வெளிப்படும் சிரிப்பு
ஜோக்கருக்கு வயிறு குலுங்கச் சிரிப்பு
கண்கள் சிரித்தால் அழுகை வரும்
கவிஞன் சிரித்தால் கவிதை வரும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading