Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024
கவிதை இலக்கம்-1795
புத்தாண்டை வரவேற்றபடி
—————————-
ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக
உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக
உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம் வருக
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே
புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வோமே
அவனியில் மக்களை மகிழ வைக்க வருக
மனித நேயம் மாண்புடன் பகிர வருக
ஒன்று பட்டு உழைத்து உண்டு வாழ வருக
பசி பட்டினி பொருளாதாரம் தர வருக
உணவு உறைவிடம் தந்து காக்க வருக
வன் கொடுமை நீங்கி நாடு வளம் பெற வருக
நல்லதே நடக்க நானிலம் சிறக்க வருக
மக்களிடையே மாற்றங்கள மலர வருக
அகிலம் முழுவதும் சமாதானம் தர வருக
இனிமையான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading