Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024
கவிதை இலக்கம்-253
பிள்ளை கனியமுது”
பிள்ளை கனி வேண்டி
தவமிருந்தாள் என் தோழி
தலைக்கு தலை மகனாய்
ஆண் கனி தவழ்ந்தான்
அள்ளி தூக்கி அணைத்து
உச்சி மோந்து கொஞ்சினாள்
கிள்ளை மொழி பேசியதை
செவிகளில் கேட்டு மகிழ்ந்தாள்
தோளுக்கு மேல் வளர்ந்து
பருத்து பெரும் கனியானான்
புதுமை உலகில் புதுமையாகி
முத்திய கனியாக சாய்ந்தான்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading