20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
Jeyam
முதுமையின் நிகழ்ச்சிகள்
முதுமை வந்து மண்வாழ்வை மொய்த்திடுமே
புதுமையென்று மெய்த்த இளமை பொய்த்திடுமே
தோலும் சுருங்கி தோற்றம் உருக்குலைந்திடுமே
மேலும் தளர்ந்து முதுகுவளைத்து உலவிடுமே
அடி எடுத்துவைக்கத் தடியும் வேண்டும்
நொடிகள்பல போனபின்பே ஒருமுழந் தாண்டும்
கொஞ்சத்தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும்
மிஞ்சிவிடும் கனத்தால் கால்முட்டிகளும் வீங்கும்
வருத்தங்கள் வந்து தொல்லைகள் கொடுக்கும்
உறுத்தும் நினைவுகள் உறக்கத்தைக் கெடுக்கும்
மலமும் சலமும் சொற்கேளாது தானாகப்போகும்
பலமும் குறைந்த வயோதிபம் நகைப்பிற்கிடமாயாகும்
அடக்கிவிடவே ஆட்டத்தை மூப்பும் வந்துசேரும்
முடக்கியே தனிமைப்படுத்தும்
பார்க்கமாட்டார் யாரும்
உறவாட உறவுகளைத்தேடி உருகியுயிர் துடிக்கும்
இறக்குமுன்பே முதுமை துயரங்களைப் படிக்கும்
ஜெயம்
05-02-2022

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...