K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம். 157

சிலுவை ஒன்று பேசுகிறது

துயிலும் இல்லத்தில்
ஆறடி நிலமும்
எனக்கு இல்லை
அளந்து வைத்த
சிறு இடத்தில்
சாம்பல் குடுவையில்
அடங்கி போகின்றேன் !

எனக்கு அடையாலம் தருவது
சிலுவையில் என் பெயரும்
தோற்றமும். மறைவும்
எழுதிய முகவரி தான் !

உறவுகள் பந்தங்கள் என்று
எவரும் உறங்கவில்லை அருகில்
எந்த வித சலனமும்
எனக்கு இல்லை
நிர்மலமாக அமைதியோடு
இருக்கின்றேன்!

நாளும் கிழமைக்கு வருபவர்கள்
சுத்திகரிப்போடு மெழுவர்த்தி்ஏற்றி
நான் சாந்தி பெறுவதற்காக
மௌனத்தை தவழவிடுவார்கள்

எனக்கு என்று சொத்தும்
என்னை முன் நிலைப்படுத்துவதும்
எனதாகிக் போன
இந்த சிலுவைதான் அன்று!
எனக்காக பேசுவதும்
சிலுவை தான் இன்று!

க.குமரன்
யேர்மனி🥲

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading