புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம். 157

சிலுவை ஒன்று பேசுகிறது

துயிலும் இல்லத்தில்
ஆறடி நிலமும்
எனக்கு இல்லை
அளந்து வைத்த
சிறு இடத்தில்
சாம்பல் குடுவையில்
அடங்கி போகின்றேன் !

எனக்கு அடையாலம் தருவது
சிலுவையில் என் பெயரும்
தோற்றமும். மறைவும்
எழுதிய முகவரி தான் !

உறவுகள் பந்தங்கள் என்று
எவரும் உறங்கவில்லை அருகில்
எந்த வித சலனமும்
எனக்கு இல்லை
நிர்மலமாக அமைதியோடு
இருக்கின்றேன்!

நாளும் கிழமைக்கு வருபவர்கள்
சுத்திகரிப்போடு மெழுவர்த்தி்ஏற்றி
நான் சாந்தி பெறுவதற்காக
மௌனத்தை தவழவிடுவார்கள்

எனக்கு என்று சொத்தும்
என்னை முன் நிலைப்படுத்துவதும்
எனதாகிக் போன
இந்த சிலுவைதான் அன்று!
எனக்காக பேசுவதும்
சிலுவை தான் இன்று!

க.குமரன்
யேர்மனி🥲

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading