சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம். 157

சிலுவை ஒன்று பேசுகிறது

துயிலும் இல்லத்தில்
ஆறடி நிலமும்
எனக்கு இல்லை
அளந்து வைத்த
சிறு இடத்தில்
சாம்பல் குடுவையில்
அடங்கி போகின்றேன் !

எனக்கு அடையாலம் தருவது
சிலுவையில் என் பெயரும்
தோற்றமும். மறைவும்
எழுதிய முகவரி தான் !

உறவுகள் பந்தங்கள் என்று
எவரும் உறங்கவில்லை அருகில்
எந்த வித சலனமும்
எனக்கு இல்லை
நிர்மலமாக அமைதியோடு
இருக்கின்றேன்!

நாளும் கிழமைக்கு வருபவர்கள்
சுத்திகரிப்போடு மெழுவர்த்தி்ஏற்றி
நான் சாந்தி பெறுவதற்காக
மௌனத்தை தவழவிடுவார்கள்

எனக்கு என்று சொத்தும்
என்னை முன் நிலைப்படுத்துவதும்
எனதாகிக் போன
இந்த சிலுவைதான் அன்று!
எனக்காக பேசுவதும்
சிலுவை தான் இன்று!

க.குமரன்
யேர்மனி🥲

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading