மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Kavikco Parama Visvalingam

வளர்ந்த குழந்ழைதகள் தாமே….

பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன்
பிறந்தோம் என்றா நினைக்கின்றது
தரணியில் பிறந்த அக் குழந்தை – தன்
வரவினை உறவிற்கு சொல்கின்றது.

அடுத்தது என்ன என்பதனை
அதுவாய்த்தானே நினைக்கின்றது
எடுத்தடி வைக்கும் முன்னாலே
ஏதோ எதுவோ தடுக்கின்றது.

கருத்துக்கள் என்னும் கையேட்டை
பொறுப்புடன்தானே திணிக்கின்றோம் – அது
வெறுப்பினைக் காட்ட முடியாமல்
வேண்டுமென்றே சிரிக்கின்றது.

பிறப்பினில் பேதம் கிடையாது – அதன்
பெமைகள் எவருக்கும் புரியாது
வல்லார் மட்டுமே பிறக்pன்றார் – அது
அல்லார் இன்னும் பிறக்கவில்லை.

வளர்;ந்த குழந்தைகளே – மண்ணில்
வாழும் தெய்வங்களே
தொட்டிலில் குழந்தைகள் தூங்குவதில்லை
சிந்தித்தபடியே சிரிக்கின்றன.

சந்திக்கும் அனைத்தையுமே
சவாலாய் எண்ணுங்கள் – அந்த
சாதனை ஏட்டினை சந்ததிக்காய்
எழுதிடச் செய்யுங்கள்.

உங்களை நம்புங்கள்
பிள்ளைகள் உங்கள் அங்கங்கள்
பெருமை கொள்ளுங்கள்
பேதமை தள்ளுங்கள்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

வளர்ந்த குழந்ழைதகள் தாமே….

பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன்
பிறந்தோம் என்றா நினைக்கின்றது
தரணியில் பிறந்த அக் குழந்தை – தன்
வரவினை உறவிற்கு சொல்கின்றது.

அடுத்தது என்ன என்பதனை
அதுவாய்த்தானே நினைக்கின்றது
எடுத்தடி வைக்கும் முன்னாலே
ஏதோ எதுவோ தடுக்கின்றது.

கருத்துக்கள் என்னும் கையேட்டை
பொறுப்புடன்தானே திணிக்கின்றோம் – அது
வெறுப்பினைக் காட்ட முடியாமல்
வேண்டுமென்றே சிரிக்கின்றது.

பிறப்பினில் பேதம் கிடையாது – அதன்
பெமைகள் எவருக்கும் புரியாது
வல்லார் மட்டுமே பிறக்pன்றார் – அது
அல்லார் இன்னும் பிறக்கவில்லை.

வளர்;ந்த குழந்தைகளே – மண்ணில்
வாழும் தெய்வங்களே
தொட்டிலில் குழந்தைகள் தூங்குவதில்லை
சிந்தித்தபடியே சிரிக்கின்றன.

சந்திக்கும் அனைத்தையுமே
சவாலாய் எண்ணுங்கள் – அந்த
சாதனை ஏட்டினை சந்ததிக்காய்
எழுதிடச் செய்யுங்கள்.

உங்களை நம்புங்கள்
பிள்ளைகள் உங்கள் அங்கங்கள்
பெருமை கொள்ளுங்கள்
பேதமை தள்ளுங்கள்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading