” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Sarvi

பிறந்த மனை….

என் வாழ்வினை ஆரம்பித்த தெய்வீக மனை…
எல்லாமான பழமுதிர்ச்சோலை….ஏகானந்த
வாழ்வின் ஆரம்ப கூடம்…. அத்தியாயத்தின் தொடுபுள்ளி இதுவே….அங்கத்துவ ஆலோசகர் கூடமும் அதுவே…..எண்ணற்ற பக்கங்களை புரட்டி புரட்டி மகிழவைத்த மாடம்…மண்வாசனை நுகரவைத்த
கூடம்…..வண்ணக்கோலங்களை
வடிவமைத்த கூடம்….விடியலின் அழகை ரசிக்க…முக்கனிகளை சுவைக்க…மாட்டுத்தொழுவத்தில் மடிமேல் செம்பினில் பெத்தாச்சி கறந்த பாலின் நுரையழகு அழகினை ருசித்த பொழுதாக …பிறந்த மனை காலத்தால் அழியாத காவியமே…தத்துப்புலினிகள் கூட்டம் வேலியின் மேலே…கரைந்திடும் காகக் கூட்டம்…துள்ளிக் குதித்து மகிழும் கன்றுக்குட்டிகள்…
ஒன்றா இரண்டா இதயத்துடிப்பே பிறந்தமனை…சுழலும் மணிகாட்டியிலும்
பிறந்த மனை…அழியாத அழகான ஓவியங்களுடன்
வரலாற்றுக் காவியம்…

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan