Selvi Nithianandan

தேர்தல்

தேர்தல் வந்தாலே
தேன்மழை பேச்சும்
தேடித்தேடிவாக்குகேட்டு
தேவைதனை அடைவது
தேர்தல்

தலைமை கதிரைக்காய்
தன்னலம் பேணலும்
தகுதி பார்ப்பதும்
தட்டிக் கழித்தலுமே
தேர்தல்

துண்டுக் கூட்டத்தை
துரத்தி யடிக்கனும்
துப்புக் கொடுத்து
துணை போகும்
தேர்தல்

சகதி பட்ட தேர்தல்
அகதி வாக்கும் சேரும்
மிகுதி பெட்டி நிரம்பும்
தகுதி ஆவார் அவரே

செல்வி. நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading