” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

கவி அழகு

பொய் கவிபுனைந்து
மெய் வரி வடித்து
தாய் மொழி சிறந்து
தந்திடும் கவி அழகு

சந்தம் சிந்தி வரும்
எதுகை மோனை சேரும்
கவிக்கு எழில் கூடும்
கற்பனை கதை தேடும்

கண்ணுக்கு மை அழகு
பெண்ணுக்கு இடை யழகு
விண்ணுக்கு உடு அழகு
மண்ணுக்கு பசுமை அழகு

கவிக்கு சொல் வனப்பு
புவிக்கு ஒளி சிறப்பு
கற்பனை தேடல் பிறப்பு
கச்சித கவி படைப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan