பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

Selvi Nithianandan

கவி அழகு

பொய் கவிபுனைந்து
மெய் வரி வடித்து
தாய் மொழி சிறந்து
தந்திடும் கவி அழகு

சந்தம் சிந்தி வரும்
எதுகை மோனை சேரும்
கவிக்கு எழில் கூடும்
கற்பனை கதை தேடும்

கண்ணுக்கு மை அழகு
பெண்ணுக்கு இடை யழகு
விண்ணுக்கு உடு அழகு
மண்ணுக்கு பசுமை அழகு

கவிக்கு சொல் வனப்பு
புவிக்கு ஒளி சிறப்பு
கற்பனை தேடல் பிறப்பு
கச்சித கவி படைப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan