சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Selvi Nithianandan

கவி அழகு

பொய் கவிபுனைந்து
மெய் வரி வடித்து
தாய் மொழி சிறந்து
தந்திடும் கவி அழகு

சந்தம் சிந்தி வரும்
எதுகை மோனை சேரும்
கவிக்கு எழில் கூடும்
கற்பனை கதை தேடும்

கண்ணுக்கு மை அழகு
பெண்ணுக்கு இடை யழகு
விண்ணுக்கு உடு அழகு
மண்ணுக்கு பசுமை அழகு

கவிக்கு சொல் வனப்பு
புவிக்கு ஒளி சிறப்பு
கற்பனை தேடல் பிறப்பு
கச்சித கவி படைப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan