முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

Selvi Nithianandan

உன்னதமாய் உன்னாலும் முடியும்
மகளீர்கே உரித்தான நாளாம்
மங்கையர் மகிழும் தினமாம்
மகிக்கும் உந்தன் பெயராம்
மகுடமாய் எழுந்திடு பெண்ணே

ஆணுக்கு சரிநிகர் நீயே
அடுக்களை தாண்டி ஆசிடை பெற்றாய்
அடிமையை உடைத்தெறி பெண்ணே
ஆளுமை அவனியில் பெருமையே

விண்ணிலும் மண்ணிலும் பலரின் சாதனையேடு
விந்தையல்ல இப்போ வியப்புடன் எழுந்திடு
விறுவிறுப்பாய் எழுந்து இருளை விரட்டிவிடு
விடியல் உனக்கானது விருட்சமாய் வளர்ந்திடு

பெண்ணாலே பற்பல பரிணாமம்
மண்ணிலே பேதமை ஒழியனும்
பெருமையாய் எண்ணியே பெயரோடு வாழனும்
பெண்ணே பேருவகையாய் இருக்கனும்

Nada Mohan
Author: Nada Mohan