Selvi Nithianandan

துளி நீர்

உயிர் வாழத் தேவையானதும்
உலகில் பெரும் பகுதியாகவும்
உடம்பிலே ஒட்டியே காணப்படுவதும்
உருவம் இல்லாத இருப்பாகும்

மனித வாழ்வின் ஆதாரம்
மழையாக பூமியை நனைப்பதும்
மண்ணிலே ஆறு குளம் கடலாவதும்
மருந்து தேவைக்கும் பயனாகும்

உயிர்கள் நிலைத்திருக் தேவையானதும்
பயிர்கள் வளர்ச்சிக்கு உபயோகமாகும்
மானிடரின் செயற்கை இயற்கை மாசுபடுவதாலே
சிக்கனமாய் பயன்படுத்தல் சாலவும் நன்றே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading