” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

நிலைமாறும் பசுமை (515) 12.05.2022

ஆரோக்கிய வாழ்விற்க்கு ஆதாரம்
அவனியிலே இப்போ சேதாரம்
ஆதி மனிதனிரின் அடையாளஅங்கம்
பாதி அழித்து விடை தேடிய பங்கம்

தானியங்கள் பழங்கள் காய்கறிகள்
தாதுப்பொருட்கள் இப்படியே கலப்படம்
உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்திலும்
உயருது புதிய நோய்களின் தாக்கம்

இயற்கையை அழித்து தேடும் செயற்கை
இதனாலே அழிந்து உருக்குலையும் மானிடம்
இலவசமாய் கிடைத்துவிட்ட விற்றமீனும் கூட
இப்போ இழந்துவிட்டு மருந்தினைத் தேடுது

காற்றோட்டமில்லா நாலுசுவருக்குள் வாழ்வு
கட்டிக்காக்கும் உயிரும் கைதிபோன்ற வலையில்
காலநிலைகூட சதிசெய்யும் நிலையில்
காசினியை பேணி கைகொடுப்போமே நாளும்

Nada Mohan
Author: Nada Mohan