மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Selvi Nithianandan

வாழ்ந்த சுவடுகள் (518)
மூத்தோர் வாழ்ந்திட்ட அத்தியாயம்
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம்
முன்பின் முரணாய் இருந்தாலும் கூட
முழுதாய் பெற்றிடும் வரப்பிரசாதம்

மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பு
முதுமைகூட தனித்து விடாப் பொறுப்பு

உறவினைச் சொல்லி பரம்பரை வாழும்
நன்மை தீமை உறவுகள் சேரும்
ஊரும் பெயரும் இன்றும் கூறும்
உலகம் போற்ற வந்தனை செய்யும்

புலத்து வாழ்வில் முதுமையின் பயம்
புலம்பி புலம்பி வருகுதே ஜயம்
புன்னகை தொலைத்து தனிமை வழிகாட்டி
புழுவாய் துடித்து கண்ணீர் சுவடுகளாய்

திருத்தம் –
கடந்தவாரம் 519 போட்டுவிட்டேன்
இந்தவாரம் 518

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading