Selvi Nithianandan

விடுமுறை
ஆறுவார விடுமுறையாய்
தைமாதப் பயணமாய்
தாயகம் சென்றுவிட்டு
தனிமையில் இங்குவர
தவித்தபொழுது நினைவாகும்

உறவுகளின் கொண்டாட்டம்
உணவுகளால் திண்டாட்டம்
ஊர்சுற்றியே உறவுகளாய்
உலாவந்த நினைவுடனும்

புதுவரவுகள் பலகண்டு
புதுமையாய் எனநாட
பூரிப்பாய் புழுதியிலே
பேரக்குட்டிகள் கூடிட

அடுத்த விடுமுறைக்காய்
ஆவலாய் எதிர்பார்பாய்
ஆனந்தமாய் நானும்
காத்திருப்புடன் இப்போ

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading