Selvi Nithianandan

விடுமுறை
ஆறுவார விடுமுறையாய்
தைமாதப் பயணமாய்
தாயகம் சென்றுவிட்டு
தனிமையில் இங்குவர
தவித்தபொழுது நினைவாகும்

உறவுகளின் கொண்டாட்டம்
உணவுகளால் திண்டாட்டம்
ஊர்சுற்றியே உறவுகளாய்
உலாவந்த நினைவுடனும்

புதுவரவுகள் பலகண்டு
புதுமையாய் எனநாட
பூரிப்பாய் புழுதியிலே
பேரக்குட்டிகள் கூடிட

அடுத்த விடுமுறைக்காய்
ஆவலாய் எதிர்பார்பாய்
ஆனந்தமாய் நானும்
காத்திருப்புடன் இப்போ

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading