இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

மூண்ட தீ

எழுபத்தைந்து ஆண்டின் வரலாறு
ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவு
ஏராளமான தீயின் வெளிப்பாடு
எரிந்து சாம்பல் ஆனதே

சுதந்திரமடைந்த நாட்டிலே
சுவாலை யாகும் போதிலே
சுருண்டு வீழ்ந்த மானிடம்
சுக்கு நூறாய் சிதறியதே

எத்தனை கொடிய விசக்கிருமிகள்
அத்தனை உள்நோக்க அழிப்புக்கள்
மூண்டதீயில் மாண்ட நூலகம்
மீண்டும் உயிர்த்து எழுந்ததே

கலவரம் என்றாலே தீவைப்பு
கடைஎரிப்பு வந்திடும் நினைவு
நிலவரம் மாறாத வடுக்கள்
நித்திலமும் மாறியதே அனலாய்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading