Selvi Nithianandan

மார்கழி

மார்கழி வந்தாலே
வந்துவிடும் கழிப்பு
மகத்தான தினமாய்
யேசுவின் பிறப்பு
மானிடம் போற்றும்
மேன்மையின் சிறப்பு
மகியிலே கொண்டாடும்
ஆனந்த விருப்பு

தெருவிலே சுடர்விடும்
விளக்கின் அலங்கரிப்பு
திசை எங்கும்
மரங்களாய் இருப்பு
தென்றலும் வருடி
குளிராய் நிலைப்பு
தெம்மாங்கு இசையாய்
பாடலும் சிறப்பு

ஆழிப்பேரலை வடுவும்
வந்திடும் நினைப்பு
ஆசியாவையே புரட்டிய
உயிர்களின் குவிப்பு
அவதியாய் இன்னுமே
மக்களின் தவிப்பு
அகத்தின் வலிகள்
அணையா விளக்காய்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading