பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

Selvi Nithianandan

இன்றுமே காத்திருப்பு (581)
ஓட்ட ஓடியும் தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் போக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லவாழ்வு

துடிதுடிக்கும் உறவுகளின் சோகசுமைகள்
தாய் தந்தை உறவின் பிரிவுகள்
தரவுப் பட்டியலின் நீள வலிகள்
தாங்கமுடியா வேதனை வடுக்கள்

இன்று நாளை என எண்ணிய விடியல்
இரண்டாயிரத்து இருபத்திமூன்றும் நகரவே
இலங்கைத்தீவில் இப்படிச் கொடூரச் சுவடும்
இரகசியமாய் கைதானவர்களின் நிலைமறைப்பே

இன்னும் எத்தனை நாட்கள் வேதனைவலியில்
வலியுடன் விழிமேலே காத்திருக்கும் கண்களே

Nada Mohan
Author: Nada Mohan