Selvi Nithianandan

கல்லறை வீரர்களின் கனவிதுவோ (590)

தாய்மண்ணை மீட்க
தன்னுயிரை தியாகம்
செய்த வேங்கைகள்
கனவுகள் ஒருபுறம்
கல்லறை மறுபுறம்
சாட்சியாய் சான்றுகள்

காலமும் செல்லுதே
ஞாலமும் அழுகுதே
கல்லறை ஒளியும்
காவியம் ஆகுதே

வீரமறவர்களின் தியாகம்
வீண்போகாது பாரினில்
விதையாய் விருட்சமாய்
விசாலமாய் வேறூன்றும்

எம்உயிரை காக்க
ஈகைசெய்த செம்மல்கள்
இருகரம் ஏந்தியே
ஆவலாய் காத்திருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading