Selvi Nithianandan

நிலாவிலும் உலா

அண்ட வெளியிலே
ஆட்சி துணையிலே
அகிலம் எங்குமே
உலாவும் நிலாவே

அன்னம் ஊட்டவே
அன்னை உன்னையே
ஆசை காட்டியே
அழகு நிலாவே

நிலவின் ஒளியிலே
நிதமும் விண்மீனாய்
நீளும் பயணமாய்
உலாவும் வடிவமே

நிலவுப் பயணமாய்
நீல்ஆம்ஸ்ட் றோங்குமாய்
வரலாறு படைத்திட்ட
அமைதிதளம் என்னுமே
பெயரும் பெற்றதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading