Selvi Nithianandan

மெல்லக் கழியுதே நாளும் (550)

நாட்காட்டியும் நலிவுற்றபோக
நாலாபக்கமும் விலைவாசிஉயர
நற்பொழுதுகூட இருளாகிப்போக
நாட்டமாய் நானும் எழுந்தேஓட

புதுவருடம் குளிருடன் பிறக்க
புதுவரவுகளும் குடும்பத்தை நிறைக்க
புலத்துவாழ்வும் சலிப்பின்றி சிறக்க
புதியதொரு ஆண்டாய் சிறக்குமே

பணம் என்னும் பாரியபோராட்டம்
பில் குவியும் திண்டாட்டம் பலருக்கு
வருட முடிவு வசதியாய் வந்துவிழ
அசதிகாட்டி விட்டா வந்திடும் மறுதுண்டாய்

பள்ளியும் விடுமுறை ஒருபுறம்
நத்தார் கொண்டாட்டமும் மறுபுறம்
கடைகள் தெருக்கள் மக்கள்கூட்டம்
கனமான விடியலாய் நகரும் காலம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading