பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

Vajeetha: அழியாத கோலங்கள்

: அழியாத கோலங்கள்

வான்நிறை வடிவழகு
வரையாத இறை கோ வழகு
வெள்ளி பூக்கும் ஒளியழகு
வென்வானியல் இரவழகு

தீட்டாத ஓவியம்
திகட்டாத காவியம்
மறைவான செயலியல்
மா இறை சத்தியின்
அழியாத கோலங்கள்

உயிர் அனுவின் உதயம்
உருவாக்கத்தின் புனிதம்
ஆண் பெண் இரு வர்க்கம்
ஆண்டவன் படைப்பின் மார்க்கம்

ஆண்டாண்டு தோறும்
அழியாத கோலம்
மாண்டவர் திரும்பாத பாலம்

மரங்களின் கோலம் மலர்கள்
மரத்தின் கனி விதை தொடர்வுகள்
அழியாத கோலம்

இயற்கையின் கோலம்
இறை நீதியின் அதிசய
அழியாத கோலம்

Nada Mohan
Author: Nada Mohan