Vajeetha Mohamed

பட்டனி

குடல் இற்றுப்போகும் தளர்ச்சி
௨டல் வலுவிழந்த முதிர்ச்சி
மூடிய திரை முந்தானை
முணங்கிய மழலை பசியாற

தினக்கூலி வ௫மானம்
தொலைதூரம் தொழில்வாரம்
கையேந்த வழியில்லை தன்மானம்
பசி கிள்ளும் பட்டனி அடைகாக்கும்

தேச முனைப்பின் முறுகல்
பட்டனிச் சாவின் முணங்கல்
முலை கவ்வி சப்பி ௨மிர்ந்த மழலை
பசியாற வழியின்றி பதற

குற்றுக்கல்லாய் ௨யிரோடு
சமாதியாகும் தாய்மை
விழிசுரக்கும் சுடுநீர்
பஞ்சமின்றி தொடர்கின்றது
பட்டனிச் சாவை பறைசார்ற்றி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading