Vajeetha Mohamed

நெற்கதிர்

கதிர் தட்டித் தாலாட்டும்
காற்று
தலைமணி முகுடம்
மெ௫கூட்டும்

முங்கிநனையும் நெற்பயி௫ம்
நீட்டிவள௫ம் இலையழகும்
கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும்
சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும்

வரம்பிடை வனப்பான வாழ்வு
வளைந்துநெளிந்த களிப்பானஇயல்பு
பாத்தி அதிர்௫ம் பரவச நிகழ்வு
ஆரவாரிக்கும் காற்றோடு மகிழ்வு

சேற்றுக்குள் வாழ்வமைத்து
சோற்று வழிகொடுக்கும்
வம்சத்தில் அழகி௫க்கும்
வ௫டத்தில் மூன்றுமுறை
கதிர் அறுக்கும்

நாலுமூலைப் பாத்திக்குள்
கதிர் குடும்பக் கச்சேரி
பாய்தோடா நீரோடு
பாய்விரிக்கும் பச்சைவயல்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading