நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

vajeetha Mohamed

நீ பிறந்ததால் இந்நாள்
புதுமையானது பொலிவானது….

மனிதம் காத்து
மகிமை சேர்த்து
புனிதம் நிறைத்து
புண்ணியம் சேர்த்தாய்…

தேய்ந்து மணம் வீசி
உருகி ஒளி தந்து
சாய்ந்தும் நிழல் தரும்
சாலையோர மரமாய் நீ…

இறைத்த கிணரே ஊறும்
இயற்கையை மெய்ப்பித்தவள் நீ
மறை வழி நின்று
மறுமைக்காய் சேமித்தவள் நீ…

உன்னிடம் கற்க பாடங்கள் ஆயிரம்
கடின உழைப்பு
சற்றும் களைக்காத முனைப்பு
உரமேறிய உள்ளம்
உயிர் மூச்சாய் பாசம்…

துரோகங்களை துடைத்தெரிவாய்
துணிவுடன் எதிர்கொள்வாய்
குறைகளுடன் பிறரை ஏற்பாய்
குற்றம் தேடாமல் இணைவாய் …

பரந்த உள்ளமும்
பரிவுணர்வும்
பாங்காய் கொண்டவள் ….

என்றும் சந்தோசமாய் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் …

மர்ழியா அபூபக்கர்.♥️[;எனது இழைய சகோதரி எனக்கா எழுதிய கவிதை
இவர் பாலைநகர் மாஹா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றார்;]

Nada Mohan
Author: Nada Mohan