மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

இடியப்பம்

பச்சரியை ஊறவைத்து
பாவையர் கூடி மாவிடித்து
வன்டு கட்டி புழுக்கிவிட்டு
அளவான உப்பு நீர்தெளித்து
கட்டி குட்டி இல்லாம மாவ
பேசஞ்சு போடு பாத்திமா

பேசஞ்ச மாவ பிடி பிடித்து
இடி௨ரலில் இதமாய் வைத்து
வெள்ளி நூலாட்டம்
சுற்றிப்போடு மதியப்போலே
கட கட என்று அடிக்கிப்போடு
பாத்திமா

இட்டிலிச் சட்டியிலே
இதமாய் தட்டினிலே
ஆவிபறக்க வெளியினிலே
அவிந்து வரனும் நூலப்பபானியிலே
பாத்திமா

ஆறவிட்டு பக்குவமாக
பார்த்து எடுத்து
தொட்டுக் சம்பலும் இறாலாணம்
தோங்காப்பூவும் சீனியும்
வைத்துக் கொடு பாத்திமா

மட்டுநகர் தயி௫ம் கொஞ்சம்
பறங்கி வாழைப்பழம் இரண்டு
மூன்றும் கொம்புத்தேனும்
கூடவே வைத்திடு பாத்திமா

குடிக்க சாயமும் இஞ்சுபோட்டு
பனஞ்கட்டிதுண்டும் பக்கம்
வைத்திடு பாத்திடுமா
தின்டுபோட்டுசொல்லுங்க
புள்ள மட்டுநகரிடியப்பம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading